கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; மழையால் 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சவுத்தாம்ப்டன்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

2-வது நாளான நேற்று முன்தினம் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 217- ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அவசரமின்றி மிக பொறுமையாக ஆடினர். 3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் வில்லியம்சன் (12 ரன்), ராஸ் டெய்லர் (0) அவுட் ஆகாமல் இருந்தனர்.

4-ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்க இருந்த நிலையில், சவுத்தாம்ப்டனின் மழை பெய்தது. இதனால், ஒரு பந்து கூட வீசப்படாமல் 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்