கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் இருந்து சாம் கரண் விலகல்

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருந்தார்.

ஜெய்ப்பூர்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் சாம் கரனை, வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. சமீபத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஆடிய 27 வயதான சாம் கரனுக்கு இடுப்புப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவதிப்பட்டு வந்த அவர், காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது காயம் முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவர் நடப்பு ஐ.பி.எல். சீசனை முழுமையாக வர் தவற விடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.