துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்து கவுரவிக்கப்படுகிறார்கள். இதன்படி மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் அசத்திய இந்தியாவின் சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கனோர் எஸ்டர்ஹய்ஜென் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இவர்களில் ஐ.சி.சி. விருது யாருக்கு என்பதை ரசிகர்கள், கமிட் டியினர் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.