image courtesy: AP/PTI 
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டி குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. 3 வார்த்தையில் பதிலளித்த ஷாகீன் அப்ரிடி

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் முன்னேறின. சூப்பர்4 சுற்று முடிவில் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

அதன்படி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 4 சுற்றில் 2-வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2-வது தோல்வியை தழுவிய வங்காளதேசம் வெளியேறியது.

இதனையடுத்து இதே மைதானத்தில் வருகிற 28-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. முன்னதாக இவ்விரு அணிகள் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றில் சந்தித்த ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டி முடிந்ததும் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் அப்ரிடியிடம் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஷாகீன் அப்ரிடி, நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மூன்றே வார்த்தையில் கூறினார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்