புதுடெல்லி,
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணி, 14.1 ஓவர்களில் 94 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதனால் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவது இது 10-வது முறையாகும்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100+ ரன்கள் வித்தியாசத்தில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகள் பட்டியலில் இந்தியா, கனடாவுடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அதிக முறை வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் இந்தியா மற்றும் கனடா தலா 10 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளன. இந்தப் பட்டியலில் ஆஸ்திரியா 9 முறையும், ஜிம்பாப்வே 8 முறையும் 100+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன.