கிரிக்கெட்

இன்னும் 5 ஆண்டுகள் ஆடியிருந்தால் சக்கர நாற்காலியில் முடங்கியிருப்பேன் - ஷோயப் அக்தர் உருக்கம்

இன்னும் 5 ஆண்டுகள் ஆடியிருந்தால் சக்கர நாற்காலியில் முடங்கியிருப்பேன் என - ஷோயப் அக்தர் உருக்கமாக கூறி உள்ளார்.

தினத்தந்தி

மெல்போர்ன்

பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ், சோயப் அக்தர் நீண்ட காலமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை பெற்று வந்தார்.

மெல்போர்னில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள 'நான் வலியில் இருக்கிறேன், எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்' என்று ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் இன்னும் 4-5 ஆண்டுகள் கூடுதலாக பாகிஸ்தானுக்கு ஆடியிருக்க முடியும் ஆனால் அப்படி ஆடியிருந்தால் அப்போதே நான் சக்கர நாற்காலியில் வாழ்நாள் பூராவும் அமர வேண்டிய துர்பாக்கியசாலியாகியிருப்பேன். அதனால்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன்.

ஆனால் அதுவுமே பாகிஸ்தானுக்காகச் செய்வது மதிப்பு மிக்கதுதான். வேகமாக வீசுவதன் பலன் எலும்புகளை இழந்து விடுவோம். ஆனால் அது பரவாயில்லை. மீண்டும் பாகிஸ்தானுக்காக எலும்புகளை இழந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது" என்றார்.

அவர் தான் கடந்த 11 ஆண்டுகளாக வலியில் இருப்பதாக வீடியோவில் கூறியுள்ளார். ஓய்வு பெற்ற பிறகும் முழங்கால் வலி பயங்கரம் என்கிறார். இதுதான் வேகப்பந்து வீச்சுக்கு நாம் கொடுக்கும் விலை என்கிறார் அக்தர். மேலும் தான் கடும் வலியில் இருப்பதாகவும் ரசிகர்கள் தனக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அவர் நெக்குருகக் கேட்டுக் கொண்டுள்ளார்.

View this post on Instagram

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்