கிரிக்கெட்

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் தில்ருவான் பெரேரா எல்லா வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட விரும்புவதாக கூறியுள்ளார். 2007-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன 39 வயதான பெரேரா 43 டெஸ்டுகளில் விளையாடி 161 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மேலும், 7 அரைசதம் உள்பட 1,303 ரன்களும் எடுத்துள்ளார். அத்துடன் 13 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து