கிரிக்கெட்

சையத் முஸ்தாக் கோப்பை கிரிக்கெட்: கர்நாடக அணி ‘சாம்பியன்’

சையத் முஸ்தாக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தூர்,

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா-மராட்டியம் அணிகள் இந்தூரில் நேற்று சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த மராட்டிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நாசாட் ஷேக் 69 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய கர்நாடக அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. கர்நாடக அணியில் ரோகன் கடாம் (60 ரன்), மயங்க் அகர்வால் (85 ரன், 57 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதம் விளாசினர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு