image courtesy: PTI  
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: புதிய அவதாரத்துடன் களம் இறங்கும் தினேஷ் கார்த்திக்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

டி20 உலகக்கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வர்ணனையாளர் குழுவை ஐ.சி.சி. நேற்று அறிவித்தது.

அதில் நடப்பு சீசனுடன் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பெங்களூரு அணியை சேர்ந்த தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல டி20 உலகக்கோப்பை தொடர்களில் வீரராக களமிறங்கிய அவர், தற்போது வர்ணைனையாளர் என்ற புதிய அவதாரத்துடன் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார்.

முன்னதாக இவர் கடந்த 2021-ல் வர்ணனையாளர் பணியை தொடங்கிய போதிலும், டி20 உலகக்கோப்பை தொடரில் வர்ணனை செய்யப்போவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்