கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: துபே, பாண்ட்யாவுக்கு இடம்...தான் தேர்வு செய்த அணியை அறிவித்த வாசிம் ஜாபர்

டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் தாங்கள் தேர்வு செய்த அணியை அறிவித்து வருகின்றனர்.

தினத்தந்தி

மும்பை,

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் நடப்பு ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு அந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்து பல இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர், தான் தேர்வு செய்துள்ள 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளார்.

பல முன்னாள் வீரர்கள் பாண்ட்யாவுக்கு பதிலாக ஷிவம் துபேவை அணியில் சேர்த்த நிலையில், இவர் இரண்டு பேரையும் அணியில் சேர்த்து ஆச்சரியம் அளித்துள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளர்களில் ஜடேஜா, குல்தீப் உடன் சாஹலையும் சேர்த்துள்ளார்.

வாசிம் ஜாபர் தேர்வு செய்த 15 வீரர்கள் கொண்ட அணி விவரம் பின்வருமாறு:-

ரோகித் (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பண்ட், சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, துபே, ரிங்கு சிங், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு