கிரிக்கெட்

டி20 உலக கோப்பை: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

சார்ஜா,

7வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர்-12 சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகின்றன. சார்ஜாவில் இன்று நடைபெற்ற குரூப்-2 பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி கட்டுகோப்பான பந்து வீச்சு மூலம் நியூசிலாந்து அணியை கணிசமாக கட்டுப்படுத்தியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹாரிஸ் ராஃப் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். இதனை தொடர்ந்து பேட்டிங் செய்து விளையாடிய பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான் (33) மற்றும் பாபர் ஆசம் (9) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன்பின் விளையாடிய பகர் ஜமன் (11), ஹபீஸ் (11) மற்றும் வாசிம் (11) ரன்களில் வெளியேறினர். சோயப் மாலிக் (27) மற்றும் ஆசிப் அலி (27) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

அந்த அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து உள்ளது. நியூசிலாந்து அணியில் சோதி 2 விக்கெட்டுகள், சான்ட்னர், டிம் சவுதீ மற்றும் போல்ட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை: கிரிக்கெட் ஸ்கோர்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள (லைவ் அப்டேட்) கிளிக் செய்யவும்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...