சென்னை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரகம்(யுஏஇ) அணியில் இடம் பிடித்து இருந்த பேட்ஸ்மேன் முகமது சோகைப் சென்னையில் நேற்று நடந்த தங்களது முதலாவது லீக் ஆட்டத்துக்கு முன்னதாக ஒழுங்கீன செயல்பாடு கார ணமாக அணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டார்.
அமீரக கிரிக்கெட் வாரி யம்உத்தரவின் பேரில் உடனடியாக நாடு திரும்பினார். வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் அவர் என்ன தவறு செய்தார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை. பாகிஸ்தான் வம்சா வளியான 27 வயதான முகமது சோகைப் கடந்த ஆண்டு டி20 போட்டியில் அறிமுகமானார். அவர் இதுவரை 16 சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஆடி ஒரு அரைசதம் உள்பட 303 ரன்கள் எடுத்துள்ளார்.