கிரிக்கெட்

2024-ஐபிஎல்-ல் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்

2024-ஐபிஎல்-ல் இருந்து 3 தமிழக வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு காலக்கெடு கொடுத்திருந்தது. அது இன்றுடன் முடிவடைகிறது.

இதனால், ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், 2024-ஐபிஎல்-ல் இருந்து 3 தமிழக வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஜெகதீசனும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து முருகன் அஸ்வினும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து ஷாருக் கானும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.  

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு