லண்டன்,
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் விளையாட மாட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போட்டி நாளை லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் தொடங்குகிறது.
பாபரின் வலது கையில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் மருத்துவக் குழு தொடர்ந்து பரிசோதித்து வருவதாகவும் பாகிஸ்தான் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
பாபர் இல்லாததால் சல்மான் ஆகா முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணியை கேப்டனாக வழிநடத்துகிறார்.