கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பிரதிகா ராவல் விலகல்

இரு அணி வீராங்கனைகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து மகளிர் பெண்கள் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் லண்டன் லார்ட்சில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் சிப்பாகி விளையாடி வெற்றி பெற இரு அணி வீராங்கனைகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியில் இடம் பெற்று இருந்த தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் முழங்கால் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பிரியா புனியா சேர்க்கப்பட்டுள்ளார்.