கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 185 ரன்னில் சுருண்டது

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 185 ரன்னில் சுருண்டது.

தினத்தந்தி

ஜோகன்னஸ்பர்க்,

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில், 2-வது நாளான நேற்று முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி, வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 49.4 ஓவர்களில் 185 ரன்னில் சுருண்டது. நடப்பு தொடரில் அந்த அணி 200 ரன்களுக்குள் அடங்குவது இது 4-வது முறையாகும். அதிகபட்சமாக கேப்டன் சர்ப்ராஸ் அகமது 50 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்க தரப்பில் டுன்னே ஆலிவர் 5 விக்கெட்டுகளும், பிலாண்டர் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அடுத்து 77 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து மொத்தம் 212 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. அம்லா (42 ரன்), குயின்டான் டி காக் (34 ரன்) களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்