மும்பை,
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 தொடரின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான் இந்திய அணியில் பும்ரா இடம் பெற்றிருந்தார்.இருப்பினும் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்தது.
இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் இலங்கை டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.