கிரிக்கெட்

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடக்கம்

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடங்க உள்ளது.

தினத்தந்தி

* கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ்பட்லரை மன்கட் முறையில் ரன்அவுட் செய்ததால் விமர்சனங்களை சந்தித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பவுலர் பந்தை வீசும் முன்பே எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு நகர்ந்து முன்நோக்கி செல்வதை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அப்படி செயல்பட்டு எடுக்கும் ரன்னை அனுமதிக்கக்கூடாது. இந்த விஷயத்தில் பேட்ஸ்மேனுக்கு ஒரு விதி, பவுலருக்கு ஒரு விதி என்ற பாரபட்சத்தை களைய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

* இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இறுதி செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது. அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது அப்பாஸ், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்