கிரிக்கெட்

ஐ.சி.சி.யின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றது

ஐ.சி.சி.யின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது.

தினத்தந்தி

மும்பை,

உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, ராணுவ முத்திரை பதித்த கையுறையை (குளோவ்ஸ்) உபயோகப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. இத்தகைய கையுறையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளில் தனிப்பட்ட லோகோவை பயன்படுத்த அனுமதி கிடையாது, இது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெளிவுப்படுத்தியது.

இந்த நிலையில் ஐ.சி.சி.யின் விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் தலைவர் வினோத் ராய் கூறுகையில், ஐ.சி.சி.யின் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுவது என்பது தான் எங்களது நிலைப்பாடு. விதிமுறைகளை நாங்கள் மீறமாட்டோம். நாங்கள் விளையாட்டை நேசிக்கும் ஒரு தேசம் என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்