பெங்களூரு,
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது;
”வெற்றிக்கு அருகில் வந்து தோற்றுவிட்டோம். நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக எடுத்ததாக நான் உணர்கிறேன். நாங்கள் ஆரம்பத்தில் தொடங்கிய விதம், குறிப்பாக விராட் கோலி மற்றும் சால்ட், ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்கள்.
ஆனால் அதன்பிறகு, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தோம், அது எங்களைப் பின்னடைவ ஏற்படுத்தியது. இது ஒரு நீண்ட தொடர். இன்றைய போட்டியில் நாங்கள் எங்கே தவறுகளைச் செய்தோம் என்பதை கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்வோம்.”
இவ்வாறு அவர் கூறினார்..