நத்தம்,
8 அணிகள் பங்கேற்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் புதிய சீசன் இன்று நத்தத்தில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியனான திருப்பூர் தமிழன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நத்தத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்கப் போட்டியிலேயே வெற்றியுடன் கணக்கை தொடங்க இரு அணிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன. முதல் வெற்றியை பதிவு செய்வது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை கவனித்து வருகின்றனர்.