சென்னை,
டிஎன்பிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் கோவைக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 25-து லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - திருண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.