கிரிக்கெட்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகளுக்கு இடையேயான 9-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்த ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 41 ரன்கள் வித்தியாசத்தில் பதம் பார்த்தது.

காரைக்குடி காளை அணி தனது தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வரை போராடி திருச்சி வாரியர்சை வென்றது. 2-வது ஆட்டத்தில் காஞ்சி வீரன்சுக்கு எதிராக வெறும் 67 ரன்னில் சுருண்டது.

ஏறக்குறைய சமபலம் வாய்ந்த இரு அணிகளும் 2-வது வெற்றிக்கு வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு