கிரிக்கெட்

டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக திருப்பூர் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

திண்டுக்கல்,

10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற உள்ள 13வது லீக் ஆட்டத்தில் கோவை - திருப்பூர் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.