திண்டுக்கல்,
10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற உள்ள 13வது லீக் ஆட்டத்தில் கோவை - திருப்பூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர்' அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. கோவை அணியில் ஆந்த்ரே சித்தார்த் 36 ரன்கள் எடுத்தார். பாலா சுப்ரமணியன் சச்சின் 30ரன்கள் எடுத்தார்.