image courtesy: twitter/@BCCI 
கிரிக்கெட்

இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகும் துஷார் தேஷ்பாண்டே

ஜிம்பாப்வே - இந்தியா இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

தினத்தந்தி

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக முதல் முறையாக இன்று களமிறங்க உள்ளார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு