புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நியூசிலாந்துக்கு சென்று ஐந்து 20 ஓவர், 5 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இது குறித்து நியூசிலாந்து ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னெர் நேற்று அளித்த ஒரு பேட்டியில். 'விராட் கோலியும், ரோகித் சர்மாவும் நீண்ட காலமாக நாம் பார்த்து வருவதை போல் இன்னும் சிறந்த வீரர்கள் தான். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி களில் வல்லவர்கள். கடந்த காலங்களில் நியூசிலாந்தின் சில ஆடுகளங்கள் அவர்களுக்கு பிடித்தமானவையாக இருந்திருக் கின்றன. இந்த முறை அப்படி அமையாது என்று நம்புகிறேன். சமீப காலங்களில் எங்களிடம் சில தொடர்களில் இந் தியா தோற்று இருப்பதால் அதற்கு பழிதீர்க்கும் நோக்குடன் அவர்கள் வரலாம்.
இது மிகச்சிறந்த தொடராக இருக்கப்போகிறது. சொந்த மண்ணில் இந்தியா போன்ற பெரிய அணியுடன் மூன்று வடிவிலான போட்டியிலும் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்' என்றார்.