ஐதராபாத்,
ஐபிஎல் தொடரில் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில், லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் இஷான் கிஷன் கூறியது பின்வருமாறு;
”இது ஒரு மிகச் சிறந்த ஆட்டம் என்று நான் நினைக்கிறேன். மொத்த ரன்கள் போதுமானதாக இல்லை. பந்துவீச்சாளர்கள் இன்று மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அவர்கள் திட்டமிட்டபடி சரியான இடங்களில் பந்துவீசினார்கள். ஆனால், இதுபோன்ற ரன்களில் ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகள் கூட ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். ஆனால் நாங்கள் இந்த ஆட்டத்தில் போராடிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
கிளாசன் மற்றும் நிதிஷ் குமார் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். நாங்கள் பேட்டிங்கிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பத்திலேயே இவ்வளவு விக்கெட்டுகளைக் கொடுப்பது எதிரணிக்கு எளிதாகிவிடும். ரிஷப் நன்றாக விளையாடினார்.
இவ்வாறு அவர் கூறினார்.