Image Courtesy: @ChennaiIPL  
கிரிக்கெட்

டோனிக்கு பிறகு கேப்டன் யார்...? - சென்னை அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில்

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது.

தினத்தந்தி

சென்னை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

சென்னை அணியின் கேப்டன் 42 வயதான டோனிக்கு இதுவே கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவருக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,

கேப்டன், துணை கேப்டன் நியமனம் பற்றி பேச வேண்டாம். அதை பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் (டோனி) விட்டுவிடுங்கள் என்றார்.

எனவே அவர்கள் (கேப்டன் மற்றும் பயிற்சியாளர்) முடிவு செய்து என்னிடம் தகவல் சொன்ன பிறகு அதை உங்களிடம் தெரிவிக்கிறேன. அதுவரை அமைதியாக இருங்கள். நடப்பு ஐ.பி.எல். தொடரில் நாக்-அவுட் சுற்றை எட்டுவது தான் முதல் இலக்கு. அதில் தான் எங்களது கவனம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்