கிரிக்கெட்

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா முழுமையாக வெல்லுமா? - கடைசி போட்டி இன்று நடக்கிறது

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா, முழுமையாக வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி முன்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது. சிறப்பான பார்மில் உள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக வெல்லுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்