கிரிக்கெட்

2027 உலகக்கோப்பையில் ரோகித், கோலி விளையாடுவார்களா? ஆஷிஷ் நெஹ்ரா

இப்போதே உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவார்களா என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

2027 உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கும் மேலான காலம் இருப்பதால், இப்போது இருந்தே அவர்களின் இடத்தை உறுதி செய்வதும் அல்லது அவர்கள் அணியில் இருக்க மாட்டார்கள் என்று கூறுவதும் சரியான முடிவாக இருக்காது என நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

நெஹ்ராவின் கருத்துப்படி,

இருவரும் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர்களை 2027 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்வதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது.

வீரரின் வயதை மட்டும் வைத்து முடிவு எடுக்காமல், அவர் அணிக்கு அளிக்கும் பங்களிப்பு, உடற்தகுதி, தற்போதைய ஆட்டத்திறன் மற்றும் பெரிய போட்டிகளில் செயல்படும் திறன் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். என்று நெஹ்ரா குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT