கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது

தினத்தந்தி

போட்செப்ஸ்ட்ரூம்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தீப்தி ஷர்மா (79 ரன்), வேதா கிருஷ்ணமூர்த்தி (56 ரன்) அரைசதம் அடித்தனர். நட்சத்திர மங்கைகள் மந்தனா (0), கேப்டன் மிதாலி ராஜ் (4 ரன்) சோபிக்கவில்லை. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. மிக்னோன் டு பிரீஸ் 90 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். முன்னதாக முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு