image courtesy: PTI 
கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணியுடன் இணைந்த நட்சத்திர வீராங்கனை

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்ததால் இவர் பங்கேற்பதில் சிக்கல் நிலவியது.

தினத்தந்தி

பெங்களூரு,

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீராங்கனை ஆஸ்திரேலியாவை சேர்ந்த எல்லிஸ் பெர்ரி நேற்று வரை அணியினருடன் இணையவில்ல. இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் ஆஷஸ் டெஸ்டின்போது காயம் ஏற்பட்டதால் இவர் பங்கேற்பதில் சிக்கல் நிலவியது.

இந்நிலையில் எல்லிஸ் பெர்ரி இன்று பெங்களூரு அணியினருடன் இணைந்துள்ளார். இதனை அணி நிர்வாகம் வீடியோவாக வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்