லண்டன்,
இங்கிலாந்தில் நடந்து வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை (குரூப் 1) எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹாமன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் ஷபாலி வர்மா முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். இதனால் ஷாபாலி வர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.அதன்படி ஷபாலி வர்மா மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த முதல் வீராங்கனை என்ற பெயரை பெற்றார்.