விளையாட்டு

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 10 ஆண்டுக்கு பிறகு பவாத் ஆலம் சேர்ப்பு

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 10 ஆண்டுக்கு பிறகு பவாத் ஆலம் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

ராவல்பிண்டி,

பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. பாகிஸ்தான்-இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் ராவல்பிண்டியில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பேட்ஸ்மேன் 34 வயதான பவாத் ஆலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடைசியாக 2009-ம் ஆண்டில் டெஸ்டில் விளையாடி இருந்தார். ஆஸ்திரேலிய தொடரில் 4 இன்னிங்சில் வெறும் 44 ரன் மட்டுமே எடுத்த இப்திகார் அகமது கழற்றி விடப்பட்டார். 16 பேர் கொண்ட பாகிஸ்தான் டெஸ்ட் அணி வருமாறு:-

அசார் அலி (கேப்டன்), அபித் அலி, ஆசாத் ஷபிக், பாபர் அசாம், பவாத் ஆலம், ஹாரிஸ் சோகைல், இமாம் உல்-ஹக், இம்ரான் கான், காஷிப் பாட்டி, முகமது அப்பாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யாசிர் ஷா, உஸ்மான் ஷின்வாரி.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்