பிரான்சில் க்ரூசெரோ மற்றும் அட்லெடிகோ மினெய்ரோ அணிகளுக்கு இடையேயான காம்பியோனாடோ மினிரோ கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. பெலோ ஹொரிசாண்டேயில் நடைபெற்ற இந்த போட்டியில், க்ரூசெரோ 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் இறுதி நொடிகளில் வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் மைதானத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து, நடுவர் ரெட் கார்டு வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளார். 23 வீரர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியே பிரேசில் கால்பந்து வரலாற்றில் அதிகபட்ச ரெட் கார்டு வழங்கப்பட்ட போட்டியாகும். இதற்கு முன் 1954ல் 22 ரெட் கார்டே அதிகபட்சமாக இருந்தது.