கால்பந்து

4 நாடுகள் கால்பந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

4 நாடுகள் கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தினத்தந்தி

மும்பை,

இந்தியா, கென்யா, சீனதைபே, நியூசிலாந்து ஆகிய 4 நாடுகள் இடையிலான கால்பந்து போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சீன தைபே அணியை தோற்கடித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி 14-வது, 34-வது, 62-வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். மற்ற இந்திய வீரர்களான உதான்டா சிங் 48-வது நிமிடத்திலும், பிரனாய் ஹால்டெர் 78-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சீன தைபே அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்