கால்பந்து

ரத்ததானம் செய்த இந்திய கால்பந்து வீரர்

ரத்த வங்கிகளில் போதிய ரத்தம் இருப்பு இல்லாததால் ரத்ததானம் தந்து உதவும்படி சில ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் அழைப்பு விடுத்ததையடுத்து இந்திய கால்பந்து அணி வீரர் ஜெஜெ லால்பெகுலா ரத்ததானம் செய்தார்.

தினத்தந்தி

அய்ஜால்,

இந்திய கால்பந்து அணியின் முன்னணி வீரர் ஜெஜெ லால்பெகுலா. ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி. அணிக்காக ஆடுகிறார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் ரத்த வங்கிகளில் போதிய ரத்தம் இருப்பு இல்லாததால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், அதனால் ரத்ததானம் தந்து உதவும்படி மிஜோ இளைஞர் அமைப்புக்கு சில ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் அழைப்பு விடுத்த தகவல் லால்பெகுலாவுக்கு தெரியவந்தது.

உடனடியாக அவர் மிசோரம் மாநிலம் டர்ட்லாங்கில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்த தானம் செய்தார். அவர் மட்டுமின்றி மேலும் 32 பேர் ரத்ததானம் செய்ய முன்வந்தனர். அவர்களில் தகுதியான 27 பேரிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டது. அந்த ஆஸ்பத்திரிக்கு மீண்டும் ரத்தம் தேவைப்பட்டால் தாங்கள் உதவிகரம் நீட்டுவதற்கு தயாராக இருப்பதாக 29 வயதான லால்பெகுலா தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு