பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர். 34 வயதான இவர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 16 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணத்துக்கு நெய்மர் முற்றுப்புள்ளி வைத்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சான்டோஸ் கிளப் அணியின் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நெய்மர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். நெய்மர் இது தொடர்பாக பேசியதாவது; "தேசிய அணியுடனான எனது பயணம் முடிந்துவிட்டது. அணிக்காக என் ரத்தத்தையும், வாழ்க்கையையும் அர்ப்பணித்தேன். இனி பிரேசில் அணிக்காக விளையாட விரும்பவில்லை” என்றார். 2026 உலகக் கோப்பை தொடரில் பிரேசில் அணி கடைசி 16 சுற்றிலேயே வெளியேறியது கவனிக்கத்தக்கது. உலகக் கோப்பை தோல்வியால் கடும் ஏமாற்றம் அடைந்த நெய்மர் இந்த ஓய்வு வெளியிட்டு இருக்கிறார்.
பிரேசில் அணிக்காக 130 போட்டிகளில் விளையாடிய நெய்மர், 80 கோல்கள் அடித்து அந்த அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். பிரேசில் அணியின் முக்கிய நட்சத்திரமாக நீண்ட காலம் விளங்கிய நெய்மரின் ஓய்வு அறிவிப்பு, உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.