image courtesy: AFP 
கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: எம்பாப்பேயின் பி.எஸ்.ஜி. அணி அரையிறுதிக்கு தகுதி

பி.எஸ்.ஜி. அணி சார்பில் கிலியன் எம்பாப்பே 2 கோல்கள் அடித்து அசத்தினார்.

தினத்தந்தி

பார்சிலோனா,

யூ.இ.எப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி லெக் 2 ஆட்டத்தில் எம்பாப்பேயின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணியும், பார்சிலோனா அணியும் மோதின.

இதில் முதல் கோலை பார்சிலோனா அடித்து முன்னிலை பெற்றாலும், அந்த அணியால் மேற்கொண்டு கோல்கள் அடிக்க முடியவில்லை. ஆனால் பி.எஸ்.ஜி. அணி 4 கோல்கள் அடித்து அசத்தியது. முழு நேர ஆட்ட முடிவில் பி.எஸ்.ஜி. 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியில் கிலியன் எம்பாப்பே 2 கோல்களும், விதின்ஹா மற்றும் டெம்பலே தலா ஒரு கோலும் அடித்தனர். பார்சிலோனா அணி தரப்பில் ரபின்ஹா மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய காலிறுதி லெக் 1 ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இருப்பினும் 2 போட்டிகளிலும் சேர்த்து பி.எஸ்.ஜி. 6 கோல்களும், பார்சிலோனா 4 கோல்களும் அடித்துள்ளன. இதனால் கோல் கணக்கின் அடிப்படையில் பி.எஸ்.ஜி. அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி