கால்பந்து

சாம்பியன்ஸ் லீக்: பெனால்டி சூட் அவுட்டில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ரியல் மாட்ரிட் அரையிறுதியில் பேயர்ன் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

தினத்தந்தி

மான்செஸ்டர்,

யூ.இ.எப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதி சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைந்தன. இதில் இன்று நடைபெற்ற கடைசி காலிறுதி லெக் 2 ஆட்டத்தில் பலம் வாய்ந்த மான்செஸ்டர் சிட்டி - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.

பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதியதால் இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணிகளும் சரி சமமாக மோதின. இதனால் இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முந்தைய காலிறுதி லெக் 1 ஆட்டமும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இதனால் அரையிறுதிக்கு முன்னேற போகும் அணி எது? என்பதை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. சூட் அவுட்டில் ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

அரையிறுதி ஆட்டங்களில் முறையே பி.எஸ்.ஜி - டார்ட்மண்ட் அணிகளும், ரியல் மாட்ரிட் - பேயர்ன் அணிகளும் மோத உள்ளன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்