கால்பந்து

சர்வதேச கால்பந்து : கிறிஸ்டியானா ரொனால்டோ சாதனை

சமீபத்தில் யுவென்டஸ் கிளப்பை விட்டு வெளியேறிய ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.

தினத்தந்தி

பாரீஸ்

கிறிஸ்டியானா ரொனால்டோ சமீபத்தில் மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் 36 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்காக 2018-ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தார். 2003 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் யுவென்டஸ் கால்பந்து கிளப்பில் இணைந்தார்.

சமீபத்தில் யுவென்டஸ் கிளப்பை விட்டு வெளியேறிய ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.

இந்த நிலையில் நேற்று உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் இரண்டு கோல்களை அடித்த ரொனால்டோ, உலகளவில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

1993 முதல் 2006 வரை ஈரானுக்காக விளையாடிய அல் டாய், 109 சர்வதேச கோல்களை அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது ரொனால்டோ 111 கோல்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்