image courtesy;AFP 
கால்பந்து

850 கோல்கள் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்று சாதனை...!!

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக்கில் அல்-ஹஸ்முக்கு எதிராக தனது 850-வது கோலை அடித்து வரலாறு படைத்துள்ளார்.

தினத்தந்தி

ரியாத்,

சவுதி அரேபியா கால்பந்து லீக் தொடர் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அல்-நாசர் அணிக்காக போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார்.

இதில் நடந்த ஆட்டம் ஒன்றில் அல்-நாசர் மற்றும் அல்-ஹஸ்ம் அணிகள் மோதின. இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். மேலும் ஆட்டத்தின் போது 2 சக வீரர்கள் கோல் அடிக்க உதவினார். இதன் மூலம் அல்-நாசர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அல் ஹஸ்ம் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அல்-நாசர் அணி புள்ளி பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இது ரொனால்டோவின் 850-வது கோலாக பதிவாகியுள்ளது. அவரது வெற்றிகரமான கால்பந்து வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக இது அமைந்துள்ளது. மேலும் கால்பந்து வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் ரொனால்டோ தான்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து