கால்பந்து

அரையிறுதியில் தோல்வி.. எம்பாப்பே பேசியது என்ன ?

பிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வாஷிங்டன்,

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் பரபரப்பான இறுதி கட்டத்திற்கு சென்றுள்ளது. நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டி ஒன்றில், ஸ்பெயின் அணி 2-0 என பிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், தோல்வி தொடர்பாக பிரான்ஸ் வீரர் எம்பாப்பே கூறியதாவது,

இந்த போட்டியில் நிறைய பிழைகளை செய்துவிட்டோம். எங்களால் திட்டமிட்ட கேம் பிளானை செயல்படுத்தவே முடியாமல் போய்விட்டது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு உரிய தரத்தில் ஆடாததால் இறுதிப் போட்டி என்ற கனவை எட்ட முடியவில்லை. உலகக் கோப்பை அரையிறுதியில் செய்ய வேண்டியதைச் செய்யத் தவறினால். வெற்றி பெற முடியாது. என தெரிவித்தார்.