கால்பந்து

யூரோ 2020: ஸ்பெயினை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இத்தாலி

யூரோ 2020 கால்பந்து போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இத்தாலி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் யூரோ 2020 கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வெம்பிளே ஸ்டேடியத்தில் நடந்த அரையிறுதி போட்டி ஒன்றில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் மோதின.

இந்த போட்டியில் 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. இதன்பின்னர் பெனால்டி அடிப்படையில் இத்தாலி அணி 4-2 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அல்லது டென்மார்க் அணியுடன் இத்தாலி இறுதி போட்டியில் விளையாட உள்ளது. லண்டன் நகரில் இன்று நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் விளையாடுகின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்