குவாடலஜரா,
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரில் முதல் அணியாக நாக்-அவுட் சுற்றுக்கு மெக்சிகோ முன்னேறியுள்ளது.
2026-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகள் குவாடலஜராவில் இன்று பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும், கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறியதால் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0-0 என்ற கணக்கில் நிறைவடைந்தது.
2-வது பாதி தொடங்கியதும் மெக்சிகோ அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் லூயிஸ் ரோமோ கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.
கோல் கணக்கில் பின்தங்கிய தென்கொரியா அணி சமநிலை கோலை தேடி தீவிரமாக போராடியது. ஆனால் மெக்சிகோ வீரர்களின் உறுதியான தற்காப்பு ஆட்டத்தால் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்த மெக்சிகோ, குரூப்-ஏ பிரிவில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக சாதனை படைத்துள்ளது. மெக்சிகோ அடுத்த ஆட்டத்தில் செக் குடியரசை எதிர்த்தாடவுள்ளது.