டொரோண்டோ,
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் 'இ' பிரிவில் இடம்பெற்றுள்ள ஈகுவடார் மற்றும் கியூராசாவ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கான்சாஸ் சிட்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரமாக முயற்சித்தன.
இருப்பினும் எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
முதல் பாதிக்கு பிறகு தாக்குதல் ஆட்டத்தை மேலும் தீவிரப்படுத்திய இரு அணிகளும் பலமுறை கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கின. ஆனால் கோல் கீப்பர்கள் மற்றும் தடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான செயல்பாடு காரணமாக இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் ஈகுவடார் மற்றும் கியூராசாவ் அணிகளுக்கு இடையிலான போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன.