வாஷிங்டன்,
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் எகிப்து வீரர் முகமது ஹானியும், அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேப் வெர்டே வீரர் டினே போர் கெஸ்சும் சுய கோல் போட்டனர்.
இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை யில் விழுந்த சுய கோல்க ளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சுய கோல்கள் இது தான். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி தொடரில் 12 கோல்கள் அடித்ததே அதி கபட்சமாக இருந்தது. அந்த சாதனை தகர்ந்தது.