Image Courtesy: @GurpreetGK / @IndianFootball  
கால்பந்து

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக குர்பிரீத் செயல்படுவார் - பயிற்சியாளர் அறிவிப்பு

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது

தோகா,

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் இந்திய அணி தனது கடைசி லீக்கில் கத்தார் அணியை, அல்ரேயானில் நாளை சந்திக்கிறது.

குவைத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெற்று விட்டதால் புதிய கேப்டனாக கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். 32 வயதான குர்பிரீத் சிங் இதுவரை 71 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் சுனில் சேத்ரி, சந்தேஷ் ஜின்கான் ஆகியோருடன் குர்பிரீத் சிங்கும் எங்களது கேப்டன்ஷிப் குழுவில் ஒருவராக இருந்தார். எனவே தற்போதைய சூழலில் அவர் அணியின் பொறுப்பை ஏற்கிறார்' என்று இந்திய பயிற்சியாளர் ஸ்டிமாக் தெரிவித்தார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்