Image Courtesy: @IndianFootball 
கால்பந்து

'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர்; இந்தியா - சிரியா அணிகள் இன்று மோதல்

இந்தியாவின் கச்சிபவுலியில் (தெலுங்கானா) 'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

கச்சிபவுலி,

இந்தியாவின் கச்சிபவுலியில் (தெலுங்கானா) 'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மொரீசியஸ், சிரியா அணிகள் கலந்து கொண்டு ஆடி வருகின்றன. இதில் இந்திய அணி, மொரீசியசுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 0-0 என (செப்டம்பர் 3) டிரா கண்டது.

அடுத்து மொரீசியஸ் - சிரியா அணிகளுக்கு இடையிலான 2வது லீக் ஆட்டத்தில் சிரியா 2-0 என்ற கோல் கணக்கில் மொரீசியஸை வீழ்த்தியது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா - சிரியா அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்